Posts

Showing posts from May, 2024

UNEP-30

   அத்தியாயம்..30 வாழ்க்கை என்னும் நந்தவனத்தில் தினமும் பூத்து குலுங்கும் மலர்களின் வாசமாய், நாளும் பொழுதும், காதல் பட்டாம்பூச்சிகளாய் ஆடி ஓடி கூடி களித்து என அத்தனை மகிழ்ச்சியாய் வாழ்க்கையை வாழ்ந்தனர் ஆரவ்ஜெயந்தனும், அமிர்தாவும். இதோ, இருவரும் கணவன் மனைவியாய், ஆதர்ஷ தம்பதிகளாய், காதல் வாழ்க்கையை வாழ துவங்கி இன்றோடு ஒரு வருட காலம் முழுமையாக நிறைவடைந்திருந்தது. கடலும் அலையும் போல, கரையும் நுரையும் போல, வானும் நிலவும் போல, வானவில்லும் வர்ணமும் போல என இருவரும் அத்தனை அந்நியோன்யமாக, ஒருவர் இன்றி மற்றவர் இல்லை என்று இணை பிரியா தம்பதிகளாய் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அன்றைய நாளில், தென்னிந்திய சர்வதேச விருது வழங்கும் விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதின் பட்டியலில் ஆரவ்ஜெயந்தன் பெயரும் இடம்பெற்றிருக்க, அதற்கு தான் இருவரும் கிளம்பி கொண்டிருந்தனர். நிச்சயம் அவனுக்கு விருது கிடைத்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது தான், இருந்தாலும் இந்த வருடம் இளைய இயக்குனர்களின் வரவு அதிகமாகவே இருந்தது. அதுவும் அவர்கள் படைப்புகளும் திறம்பட இருக்க, இந்த வருட விருத்திற்கு ஏகப்பட்ட இயக்குனர்கள் போட