Posts

Showing posts from April, 2024

UNEP-29

  அத்தியாயம் 29           உடல் தான் இயங்க முடியாமல் இருந்ததே தவிர, அவளது உள்ளம், ஒவ்வொரு நொடியும், ஆரவ்வை தான் எண்ணிக் கொண்டிருந்தது. கை, கால்களை சுருக்கி, சுருண்டு படுத்து கிடந்தவளை, உள்ளுக்குள் ஓடும் அவன் குரலே, இன்னமும் அவளை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தது. இமைகள் மூடி இருந்த பொழுதும், அவளுக்குள்ளே, கேட்ட அவனின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக அவளை சுயநினைவிற்கு கொண்டு வந்தது. ‘நான் உன்னை விட்டுட்டு எங்கே போக போறேன்? எனக்கு தெரியாதா? நான் இல்லாமல் உன்னால் இருக்க முடியாதுன்னு. நான் சாகும் போது கூட உன்னையும் கூட்டிட்டு தான் போவேன். அதனால் நீ இவ்வளவு கவலைப்பட தேவையில்லை’ என்றது அவளுக்குள் அவனது குரல். அசரிரீயாக கேட்ட அவனது குரலில், மெல்ல மெல்ல சுயநினைவை பெற்றவள், திறக்க முடியாமல் இருந்த இமைகளை மெல்ல திறந்தாள். யாரும் அவளை தொந்தரவு செய்யவில்லை. தலைசுற்றுவது போல் உணர்ந்த பொழுது வந்து கட்டிலில் விழுந்தவள், தான் எத்தனை மணிநேரம் ஆனதோ தற்பொழுது தான் கண் விழிக்கிறாள். தற்பொழுதும் உடலில் தெம்பு இல்லை தான். இருந்தாலும் எங்கேயோ அவன் குரல் கேட்பது போல் இருக்க, மெல்ல கட்டிலை விட்டு இறங்கி வந்தவள் வாசலில

UNEP-28

  அத்தியாயம்.28    சென்னை விமான நிலையம்.. தான் எங்கு இருக்கிறோம், சுற்றி என்ன நடக்கிறது என்பது எதையும் கருத்தில் கொள்ளாது, நினைவு முழுவதும் ஆரவ் மட்டும் நினைந்திருக்க, மனம் முழுவதும் அவனுக்கு எதுவும் நடந்திருக்க கூடாது என்ற வேண்டுதலோடு அந்த காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தாள் ஆரவ்வின் அமிர்தாஸ்ரீ. நிச்சயம் இப்படி ஒரு சூழ்நிலை வரும் என்று அவள் கனவில் கூட நினைக்கவில்லை. இமை மூடினாலும், திறந்தாலும், அவனின் சிரித்த முகம் தான் அவளின் முன் நிழலாடியது. “எங்கே போனீங்க? நீங்க தானே என் பிடிமானம், நீங்க இல்லாமல் நான் மட்டும் எப்படி?  என மனதோடு மானசீகமாக அவனோடு பேசி கொண்டிருந்தவளுக்கு பதில் கூற தான் அவனில்லை. கண்களில் நீர் வழிய அதனை துடைக்க கூட தோன்றாது அவனை பற்றிய சிந்தனையில் உள்ளுக்குள் கதறி கொண்டு அமர்ந்திருந்தாள். ஆரவ்வுடனான இந்த ஒரு மாத கால வாழ்க்கை, அமிர்தாவிற்கு சொர்க்கம் என்றே சொல்லலாம். அத்தளவிற்கு மகிழ்ச்சி என்னும் கடலில் மூழ்கி முத்தெடுத்து கொண்டிருந்தாள். கனவில் கூட நினைத்து பார்க்காத அளவிற்கு அவள் வாழ்க்கை அவனுடன் அத்தனை ஆனந்தமாக சென்றது.  இந்த ஒரு மாத காலமும், ஆரவ் அவளுடன் தான் தன்