UNEP-29
அத்தியாயம் 29 உடல் தான் இயங்க முடியாமல் இருந்ததே தவிர, அவளது உள்ளம், ஒவ்வொரு நொடியும், ஆரவ்வை தான் எண்ணிக் கொண்டிருந்தது. கை, கால்களை சுருக்கி, சுருண்டு படுத்து கிடந்தவளை, உள்ளுக்குள் ஓடும் அவன் குரலே, இன்னமும் அவளை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தது. இமைகள் மூடி இருந்த பொழுதும், அவளுக்குள்ளே, கேட்ட அவனின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக அவளை சுயநினைவிற்கு கொண்டு வந்தது. ‘நான் உன்னை விட்டுட்டு எங்கே போக போறேன்? எனக்கு தெரியாதா? நான் இல்லாமல் உன்னால் இருக்க முடியாதுன்னு. நான் சாகும் போது கூட உன்னையும் கூட்டிட்டு தான் போவேன். அதனால் நீ இவ்வளவு கவலைப்பட தேவையில்லை’ என்றது அவளுக்குள் அவனது குரல். அசரிரீயாக கேட்ட அவனது குரலில், மெல்ல மெல்ல சுயநினைவை பெற்றவள், திறக்க முடியாமல் இருந்த இமைகளை மெல்ல திறந்தாள். யாரும் அவளை தொந்தரவு செய்யவில்லை. தலைசுற்றுவது போல் உணர்ந்த பொழுது வந்து கட்டிலில் விழுந்தவள், தான் எத்தனை மணிநேரம் ஆனதோ தற்பொழுது தான் கண் விழிக்கிறாள். தற்பொழுதும் உடலில் தெம்பு இல்லை தான். இருந்தாலும் எங்கேயோ அவன் குரல் கேட்பது போல் இருக்க, மெல்ல கட்டிலை விட்டு இறங்கி வந்தவள் வாசலில