UNEP-22
அத்தியாயம்-22 ஆரவ் மருத்துவமனை வந்து சேரும் பொழுது நன்கு விடிந்து விட்டிருந்தது. மருத்துவமனை வளாகத்தின் உள்ளே வர, அங்கே இருந்த இருக்கையில், கைகளை கொண்டு தலையை தாங்கியப்படி உறங்கி கொண்டிருந்தான் ஹரி. அமிர்தாவின் அறையை திறந்து பார்க்க, அவளும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். ஹரியின் அருகில் வந்த ஆரவ், “ஹரி” என்று அழைக்க, அவனும் தூக்கத்தில் இருந்து சட்டென்று எழுந்து கொண்டான். “என்ன சார்? என்ன வேணும்? கொஞ்சம் கண் அசந்துட்டேன். அமிர்தாக்கு ஏதாவது வேணுமா?” என மளமளவென்று கேட்க, ஆரவ்வோ, “ஒன்னும் வேண்டாம் ஹரி. நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு. நான் ஏதாவது தேவைன்னா கூப்பிறேன்” என்றான். “நான் மட்டுமா? நீங்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க சார். ரெண்டு நாளா நீங்களும் தூங்கலையே. கண்டிப்பா உங்களுக்கும் ரெஸ்ட் வேணும்” என ஹரி அக்கறையாக கூற, “இல்லை ஹரி, அமிர்தாவை பார்த்துக்கணும். நான் இங்கே இருக்கேன். நீ போ. என்னால் இப்போ வேறெந்த வேலையிலும் கான்சன்ட்ரேட் பண்ண முடியாது. நீதான் எல்லாம் மேனேஜ் பண்ணனும்” என்றதும் ஹரியும், “ஓகே சார். நான் எல்லாம் பார்த்துகிறேன். நீங்க அமிர்தாவை பார்த்துக்கோங்க” என விடைபெற்