UNEP-13
அத்தியாயம்…13 பெரும் போர்களத்தையும், அதைவிட பெரும் அமைதியையும் ஒரு சேர கொண்டிருப்பதை போல் கலவையான உணர்வுகளில் தத்தளித்து கொண்டிருந்தாள் அமிர்தா. கொஞ்ச நாளாகவே ஆரவ்வின் மீது வந்த ஈர்ப்பை அவன் புரிந்து கொண்டானே என்ற நிம்மதியா? இல்லை, அவனுக்கும் தன் மீது காதல் உள்ளதே எப்படி? என்ற கலவரமா? இரண்டுமே அவளை ஒருசேர ஆட்டுவித்தது. அவளுக்கென்று இருந்த சிறிய மனதில், கொஞ்சமே கொஞ்சமாய் உருவான நம்பிக்கையில், அதனால் மலர்ந்த காதலை கூண்டிற்குள் அடைத்து, வலிக்க,வலிக்க மருந்தினை செலுத்தி, பின் விளைவுகளை கொஞ்சமும் யோசிக்காது, பரிசோதனை எலியாய், சோதனைக்குட்படுத்தப்பட்ட வலி இன்னமும் அவள் மனதில் ஒரு ஓரமாய் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால் தான், மரித்து போன மனதுடன் உயிருள்ள பிணம் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஆனால், அதனை, உயிர்ப்பித்து உறவாக்கும் முயற்சியில் ஆரவ் இறங்கினால் எங்கனம் அவளால் ஏற்றுக்கொள்ள முடியும். மீண்டும் தம்மை பரிசோதனை எலியாக்கி விட்டால் என்ன செய்வது? மீண்டுமொரு ஏமாற்றத்தை தாங்கும் சக்தி உண்டா அவளுக்கு? அந்த பயம் கொஞ்சம் இல்லை நிறையவே கொட்டி கிடக்கிறது அவள் மனதில். ஆரவ்