UNEP-5
அத்தியாயம்..5 நிசப்தமான இரவின் இருளில், மெல்லிய அலையோசைகள், அந்த இரவின் இருளை இனிமையாய் அலங்கரித்து, இதத்தை பரவ செய்ய, அதில் சுகமாய் முழ்கி இருந்தான் ஆரவ்ஜெயந்தன். ராமமூர்த்தி அழைத்ததன் பெயரில், விருப்பமே இல்லாமல் வந்தவன், முதலில் கண்டது, அந்த பிரம்மாண்டமான இல்லத்தை தான். இங்கு வந்த பின்பு தான் தெரிந்தது இந்த இடம் ராமமூர்த்தியின் கெஸ்ட் ஹவுஸ் என்பது. மரியாதை நிமித்தமாக அவருக்கு வணக்கத்தை தெரிவித்து விட்டு, தனித்து வர முயற்சிக்க, எங்கே அவர் விட்டால் தானே!!, தெரிந்தவர், தெரியாதவர் என ஒருவர் விடவில்லை அனைவருக்கும் அவனை அறிமுகப்படுத்தி, அவனை புகழ்ந்து பேச, அவனுக்கோ சலிப்பாக இருந்தது. எப்படியோ அவரிடமிருந்து தப்பித்து தனித்து வந்தவன் இதோ இருளில் தெரிந்த அலையோசைகளை ரசிக்க ஆரம்பித்து விட்டான். கடவுளின் படைப்பில் எல்லாமே அழகு தான் அவனை பொறுத்தவரையில். நல்லவேளையாக ராமமூர்த்தி பார்ட்டியை வீட்டின் மொட்டை மாடியில் ஏற்பாடு செய்ந்திருந்தார். அது ஒன்று தான் அவனுக்கு இங்கு கிடைத்த ஒரே ஆறுதலான விஷயம். கருப்பு காகிதத்தில் அள்ளி தெளிக்கும் வெள்ளி சரிகையாய், தெரிந்த கடலும், கடலலையும், அவனின் ம